நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் தனது முதல் வீட்டைச் சிறுவர் கல்விக்காக இலவசப் பள்ளியாக மாற்றியுள்ளார்.
காஞ்சனா 4 படத்துக்கான அட்வான்ஸ் தொகையிலிருந்து இந்த சமூகப் பணியை தொடங்கியிருப்பதாக லாரன்ஸ் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
“ஒவ்வொரு முறையும் நான் ஒரு புதிய பட அட்வான்ஸ் பெறும் போது, என் மனசுக்கு நெருக்கமான சமூக முயற்சியை ஆரம்பிப்பேன். இந்த முறை, நான் முதல் வாங்கிய வீட்டைச் சிறுவர் கல்விக்காக ஒரு பள்ளியாக மாற்றுகிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடு லாரன்ஸுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒருகாலத்தில் அவர் வாங்கிய இந்த வீடு முதலில் அனாதை இல்லமாக பயன்படுத்தப்பட்டது. அப்போது அவரது குடும்பம் வாடகை வீடுக்கு மாற்றப்பட்டது. இன்று அந்தக் குழந்தைகள் வளர்ந்து தன்னம்பிக்கையுடன் நிற்கிறார்கள்.
அதில் ஒருவரான வேளாங்கண்ணி, தற்போது ஒரு தகுதி பெற்ற ஆசிரியராக, இந்த புதிய பள்ளியின் முதல் ஆசிரியராக பணியாற்றவிருக்கிறார்.
திரை உலகில் மட்டுமல்ல, திரைக்கு வெளியேவும் மனிதாபிமானம் காட்டும் நட்சத்திரமாக மீண்டும் நிரூபித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
(Tamil Craze)
Kanchana 4 is rolling and halfway through — I’m Happy to Announce That I’m Transforming My First Home into a Free School for Children with my Kanchana 4 Advance – with the First Teacher Being a Child Who Grew Up in my home 🙏
— Raghava Lawrence (@offl_Lawrence) September 11, 2025
I’m so delighted to share some exciting news with… pic.twitter.com/qvcCYQruGE